நிதி திட்டம் தொடர்பில் தனியார் பத்திரப் பதிவுதாரர்களுடன் கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ள இலங்கை!!

இந்தநிலையில் இலங்கையின் நிதியமைச்சு தனது அறிக்கையில், ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் இருந்தபோதிலும் மறுசீரமைப்பு விதிமுறைகள் குறித்த உடன்பாட்டிற்கு வருவதற்கு கட்சிகள் தவறிவிட்டதாக தெரிவித்துள்ளது. இது, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கிடைக்கக்கூடிய நிதியில் இலங்கைக்கு சிக்கல்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், பத்திரதாரர்களின் வழிநடத்தல் குழு இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை நீடிப்பதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்பதை நிதியமைச்சின் அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.

எனினும், அறிக்கையொன்றை வெளியிட்ட நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க (Shehan Semasinghe), இலங்கை அதிகாரிகள் அனைத்து கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளிலும் நல்ல நம்பிக்கையுடன் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top